பாஜகவை விமர்சித்து பாடல்! சலவை பெண் தொழிலாளிக்கு எம்எல்சி பதவி வழங்கிய லாலு கட்சி! நடந்தது என்ன?
பாட்னா: பீகார் சட்ட மேலவை(எம்எல்சி) தேர்தலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சலவை பெண்ணான முன்னி ரஜாக்கை ராஷ்ட்ரிய ஜனதாதளம்(ஆர்ஜேடி) கட்சி வேட்பாளராக நிறுத்தி வெற்றியை பதிவு செய்துள்ளது. பாஜகவை விமர்சித்து பாடல் பாடிய தொடர்ந்து கட்சிக்கும், கட்சி தலைவர்களுக்கும் விசுவாசமாக இருந்ததால் இந்த பதவி அவரை தேடி சென்றுள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் சமீப காலமாக பாஜக, ஐக்கிய ஜனதாதளம் இடையே உரசல் போக்கு உள்ளது.
இங்கு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியை வழிநடத்தி எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

சட்ட மேலவை தேர்தல்
பீகாரில் 75 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவை உள்ளது. இங்கு பொதுவாக கோடீஸ்வரர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்சிக்களும் கோடீஸ்வரர்களாவர். தற்போது இந்த நிலை மாறியுள்ளது.

பெண் சலவை தொழிலாளி தேர்வு
ஏனென்றால் சலவை தொழிலாளி ஒருவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது திங்கட்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அசோக் குமார் பாண்டே, முன்னி ரஜக், கரி சுஹைல் ஆகியோர் ராஷ்ட்ரிய ஜனதாதளம்(ஆர்ஜேடி) கட்சியை சேர்ந்தவர்களாவ. ரவீந்திர பிரசாத் சிங், அபாக் அகமது கான் ஆகியோர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்களாவர். ஹரி சாஹ்னி மற்றும் அனில் ஷர்மா ஆகியோர் பாஜகவின் தேர்வாக உள்ளது.

அனைத்து போராட்டங்களிலும்...
இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னி ரஜக் பக்தியார்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தார். மாநிலத்தின் பல்வேறு நிகழ்ச்சி, போராட்டம், தர்ணாவில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தற்போது ராஷ்ட்ரிய ஜனதாதளம் சார்பில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவை விமர்சித்து பாடல்
மே 20ல் சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) லாலு பிரசாத்தின் வீடுகளில் சோதனை நடத்தியபோது இவர் தர்ணா நடத்தினார். மேலும் இதற்கு முன்பு பக்தியார்பூரில் மேடையில் பாஜகவை விமர்சனம் செய்தும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவாகவும் பாடல் ஒன்றை பாடினார். மேலும் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை பார்க்க இவர் சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் கதறி அழுதது செய்தி சேனல்களில் வெளியானது. இதுபோன்ற தீராபற்று காரணமாக லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினரை ஈர்த்தார். இதன் தொடர்ச்சியாக அவரை பீகார் சட்ட மேலவை உறுப்பினர் பதவி தேடி வந்துள்ளது.

முன்னி ரஜாக் கூறுவது என்ன?
சட்ட மேலவை உறுப்பினராக முன்னி ரஜாக் கூறுகயைில், "நான் சட்ட மேலவை உறுப்பினராக மாறியதை நம்ப முடியவில்லை. மே கடைசி வாரத்தில் என்னை லாலு பிரசாத் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு லாலு பிரசாத்தின் மனைவி ரப்ரி தேவி, லாலுவின் மூத்த மகன் தேஜூ மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தேன். என்னை எம்எல்சி(சட்டமேலவை தேர்தல்) ஆக்க முடிவு லாலு முடிவு செய்திருப்பதாக கூறினார். இதை கேட்டு நான் அதிர்ச்சியில் பேசாமல் இருந்தேன். லாலு ஜியும் ராப்ரி தேவியும் எனது பெற்றோரைப் போன்றவர்கள். வாய்ப்பளித்ததற்கு நன்றி.

பாஜகவின் எதிர்மறையை சுத்தம் செய்வேன்
நான் கடந்த 30 வருடங்களாக சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். என் பெற்றோரும் சலவை தொழிலாளிகள் தான். நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து அவையில் கேள்வி எழுப்புவேன். பாஜகவின் எதிர்மறை எண்ணங்களை நான் சபைக்குள் சுத்தம் செய்வேன்'' என்றார்.

பாஜக விமர்சனம்
இதற்கிடையே முன்னி ரஜாக் தேர்வு குறித்து பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி பாஜக எம்எல்சி நவல் ககிஷோர் யாதவ் கூறுகையில், ‛‛ நான் முன்னி ராஜாக்கின் தேர்வை வரவேற்கிறேன். இருப்பினும் அவரால் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது. வெறும் முகமாக மட்டுமே இருக்க முடியும். நிதி அனைத்தும் அந்த கட்சியின் குடும்பத்தினரால் செலவு செய்யப்படும்'' என விமர்சனம் செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications