பாஜகவை தூக்கி எறிய மக்கள் ரெடியாகி விட்டார்கள்.. போட்டு தாக்கும் அகிலேஷ் யாதவ்.. மிரளும் கட்சிகள்
சமாஜ் வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் பாஜகவை விமர்சித்து வருகிறார்
பாட்னா: படேலின் காலடி தடங்களை பின்பற்றுவதாக பாஜக தலைவர்கள் சொல்கிறார்களே, ஆனால், இன்னைக்கு விவசாயிகள் வறுமையில் இருக்கிறார்கள்.. அவர்களின் வருமானம் உயராமல் அப்படியே இருக்கிறது.. உபியில் சட்டம் ஒழுங்கும் மோசமாக உள்ளது.. அதனால் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய இம்மாநில மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உபியில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... எனவே, அனைத்து கட்சிகளுமே இப்போதே தேர்தல் களத்தில் பிஸியாகிவிட்டன..
இதற்கான தீவிர பிரச்சாரத்தையும் அகிலேஷ் யாதவ் முன்னெடுத்துள்ளார்.. செல்லுமிடமெல்லாம் பாஜகவை சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார்.

விவசாயிகள்
"பாஜகவின் தாமரை பொய் மற்றும் வஞ்சகம் என்ற நிலத்தில் வளர்கிறது... அந்த கட்சி தன்னுடைய அறிக்கையை மறந்துவிட்டது. விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலையை பெற முடியவில்லை. லகிம்பூரில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் எரிக்கின்றனர்.... தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா? என்று எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.. ஆனால், அவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து யாருமே பதிலளிக்கவில்லை" என்று பாஜகவின் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்..

புதுவியூகம்
அதுமட்டுமல்ல, இந்த முறை தேர்தலில் அகிலேஷ் யாதவ் இன்னொரு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார்.. இத்தனை காலம் அதாவது இவரது தந்தை முலாயம் சிங் யாதவ் காலத்தில் இருந்தே யாதவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்த நிலையில், இந்த முறை அகிலேஷ் தன்னுடைய தேர்தல் வியூகத்தை மாற்ற நினைக்கிறார்.. அதன்படி தலித்துகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறார்.

அதிருப்தி
இதனிடையே, அதிருப்தி தலைவர்கள் கட்சி தாவும் சம்பவமும் அரங்கேற தொடங்கி விட்டது. அவ்வகையில், பாஜகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், அவர்கள் தங்களை சமாஜ்வாடி கட்சியில் இணைத்துக்கொண்டனர்..

விசாரணை
இந்நிலையில், நேற்று, ஹர்தோயில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மக்கள் முன் பேசும்போது சொன்னதாவது: "காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.. ஏன் என்றால் காங்கிரஸ் என்பது பாஜக.. பாஜக தான் காங்கிரஸ்.. எங்களுக்கும், மற்ற தலைவர்களுக்கும் எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடந்து வருவதற்கு காரணமே காங்கிரஸ் கட்சிதான்.

தலைவர்கள்
பாஜக தலைவர்கள் சர்தா வல்லபாய் படேலின் காலடி தடங்களை பின்பற்றுவதாக சொல்கிறார்கள், ஆனால் இன்று விவசாயிகள் அதே கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள்.. அவர்களின் வருமானம் அப்படியே இருக்கிறது.. அது இரட்டிப்பாகவில்லை... உபி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது... அதனால் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துள்ளனர்" என்றார்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications