Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்கீகாரம் எங்கே? முறையான அனுமதி பெறாத 33 பள்ளிகளுக்கும் பறந்த திடீர் உத்தரவு.. புதுச்சேரி பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக லிஸ்ட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் என்னென்ன என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். அந்த செய்திக்குறிப்பில் உள்ளதாவது:

Puducherry school education


"புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.. அது சட்டத்துக்கு முரணானது என்று கருதப்படுகிறது.

கல்வித்துறை: முதல் கட்டமாக அங்கீகாரம் பெறாத 33 தனியார் பள்ளிகளை மூடுமாறு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி பள்ளி கல்வித்துறையானது உத்தரவிட்டது. மேலும், அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.

அதனை தொடர்ந்து, 2வது கட்டமாக கிருஷ்ணா நகர் ஸ்ரீகலா மழலையர் பள்ளி, சங்கரதாஸ் சுவாமிகள் நகர் அக்‌ஷயா மழலையர் பள்ளி, முத்தியால்பேட்டை சிஷூ பவன் பள்ளி, அவ்வல் மழலையர் பள்ளி, சாரம் லட்சுமி பள்ளி, நவசக்தி நகர் ஸ்ரீராம் குரு பள்ளி, வில்லியனூர் ஆருத்ரா முன்மழலையர் பள்ளி, மூகாம்பிகை நகர் லிட்டில் ஜீனியஸ் முன்மழலையர் பள்ளி, தவளக்குப்பம் அகல்வ்யா சர்வதேச பள்ளி, அரியாங்குப்பம் ஆங்கிலோ சர்வதேச பள்ளி உள்ளிட்ட மேலும் 33 அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு பள்ளி கல்வி துறையானது கடந்த 25ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள்:
எனவே, அத்தகைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், பள்ளி நிர்வாகமோ அல்லது பெற்றோர்களே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கையின் போது, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் முறையான அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

விதிமுறை மீறல்கள்:
அவ்வாறு, அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துவது, புதுச்சேரி பள்ளி கல்வி சட்டம், 1987 மற்றும் புதுச்சேரி பள்ளி கல்வி விதிகள், 1996 ஆகியவற்றின் படி விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகும்.

மேலும், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை சட்டம் (ஆர்டிஇ), 2009 பிரிவு 18(5)ன் படி, அங்கீகார சான்றிதழை பெறாமல் பள்ளியை தொடர்ந்து நடத்துபவர் அங்கீகாரத்தை திரும்ப பெற்ற பிறகு, ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்ந்து விதி மீறல்கள் இருந்தால், அத்தகைய மீறல் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+