இப்படி அரசியல் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.. பேரறிவாளன் விடுதலை பற்றி அற்புதம்மாள் வேதனை
புதுச்சேரி: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மரியாதைக்குரிய ஒரு கையெழுத்தை வைத்து இப்படி ஒரு கேவலமான அரசியல் செய்வார்கள் என நான் கற்பனை கூட
செய்யவில்லை என புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அற்புதம்மாள் வேதனை தெரிவித்துள்ளார்

7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் எனவும் வலியுறத்தியுள்ளார். ராஜீவ்காந்தி கொலையாளிகளான பேரறிவாளன்
உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு அழுத்தம் தர வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற மார்ச் 9-ம் தேதி புதுச்சேரி, சென்னை, கோவை உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெற உள்ள மனித சங்கலி போராட்டத்திற்கும் ஆதரவு கேட்டு அற்புதம்மாள் பயனித்து வருகிறார். இந்நிலையில் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து
கொண்ட அற்புதம்மாள் 100-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் தனது மகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவை காண்பித்து விடுதலையை நிராகரித்து வந்தனர்.

நான் மிகவும் மதிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட விடுதலை செய்ய இதுவரை முன்வரவில்லை என வேதனை தெரிவித்த அவர், தமிழக ஆளுநர் கையெழுத்திட்டால் விடுதலை செய்யலாம் என்ற நிலையில் அந்த மதிப்பிற்குரிய கையெழுத்தை வைத்து இப்படி ஒரு கேவலமான அரசியல் செய்வார்கள் என
நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்றும், எனவே உடனடியாக 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதையொட்டியே ஆளுநருக்கு அழுத்தம் தர வலியுறத்தி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications