பாமக மாவட்ட செயலாளர் ஓட ஓட வெட்டிக்கொலை... பதைபதைக்க வைக்கும் வீடியோ - 144 தடை
திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால்: திருநாள்ளாறில் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கலவரம் பதற்றத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
படுகொலை செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் பெயர் தேவமணி என்பதாகும். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த இவர், திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கௌரவ தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
தேவமணி நேற்றிரவு திருநள்ளாறு தேரடி பகுதியில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அவரை எதிர்பார்த்து காத்திருந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தை மறித்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். தேவமணியின் கை, தலை மற்றும் உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவமணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

வெட்டி சாய்த்த கும்பல்
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தேவமணி இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டியது. அதில் இருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடுகிறார் தேவமணி. விடாது விரட்டிச்சென்ற கும்பல் அவரை சராமாரியாக வெட்டி சாய்த்தது.

திருநள்ளாறில் பதற்றம்
தேவமணி படுகொலை செய்யப்பட்டதை அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேவமணியின் சடலத்தை கைப்பற்றிய காரைக்கால் மாவட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கூலிப்படை கொலை
இதுகுறித்து திருநள்ளாறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்திருக்கலாம் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை பாதுகாப்பு
தேவமணி மீது ஏற்கனவே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட தேவமணியின் உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை, தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருநள்ளாறில் தடை உத்தரவு
பாமக காரைக்கால் மாவட்ட செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றம் மற்றும் கலவரத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறில் 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications