புதுவையில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழிசை தித்திப்பான அறிவிப்பு!
புதுச்சேரி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தை போன்று புதுவையிலும் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,819 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு தினசரி பாதிப்பில் புதிய உச்சம் தொட்டது.

புதுவை நகரில் மட்டும் 1,435 பாதிப்புகள் பதிவாகியின. தினசரி உயிரிழப்பும் 18-ஐ தொட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த புதுவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுவை அரசின் இந்திராகாந்தி பட்டமேற்படிப்பு மையம் பொது மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் காற்றின் மூலம் நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- நேற்றைய தினம் புதுவையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள் ஆவர். கொரோனா முதல் அலை 50 வயது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களைதான் அதிகம் பாதித்தது. ஆனால் இரண்டாவது அலை இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. எனவே இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாலைகளில் தேவையில்லாமல் கூடி நிற்க வேண்டாம்.
அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் கூட பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனாவை விரட்டுவதற்காக மருத்துவ பணியாளர்கள் தங்களை அர்பணித்து சேவை செய்து வருகின்றனர்.
எனவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேலான மதிப்பீட்டில் கூடுதல் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications