"பாஜகவுக்கு ஆதரவாக சொல்லல" திமுக அராஜகம் அதிகரிப்பு.. மூக்கணாங் கயிறாக ஆளுநர்.. டிடிவி தினகரன்!
ராமநாதபுரம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு மூக்கணாங் கயிறு போல செயல்படுகிறார். அவர் இல்லை என்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்துவிடும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 60-வது குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் திமுக, அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பசும்பொன் வந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

குடும்ப ஆட்சி
இதன்பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதேநிலை நீடித்தால் திமுக ஆட்சி விரைவில் மக்களால் வீட்டிற்கு அனுப்பப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆட்சி நடத்தி வருகிறார்.

அதிமுக ஒற்றுமை எப்போது?
தொடர்ந்து, அதிமுக ஒற்றுமை எப்போது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னொரு கட்சி பற்றி பேசக்கூடாது. இருந்தாலும், இதற்கு முன் ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்து செயல்பட்டபோது யாரால் ஒற்றுமை ஏற்பட்டதோ, மீண்டும் அவர்கள் நினைத்தால் மட்டுமே இருவரும் சேர்வார்கள் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் ஆட்சி
தொடர்ந்து ஆளுநர் பேச்சு பற்றிய கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லையென்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்திருக்கும். ஆளுநர் தான் இப்போது மூக்கணாங் கயிறு போல் இருக்கிறார். பாஜகவிற்கு ஆதரவாக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து முன்னதாக நான் எச்சரித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மூக்கணாங் கயிறாக ஆளுநர்
தொடர்ந்து ஆளுநர் பேச்சு பற்றி கேள்விக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லையென்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்திருக்கும். ஆளுநர் தான் இப்போது மூக்கணாங் கயிறு போல் இருக்கிறார். பாஜகவிற்கு ஆதரவாக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து முன்னதாக நான் எச்சரித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications