சேலத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி திடீர் சந்திப்பு
Recommended Video
சேலம்: சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு சென்று அமமுக நிர்வாகி புகழேந்தி இன்று சந்தித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் வந்துள்ளார். அவர் சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி முதல்வர் பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு சென்று இன்று சந்தித்துள்ளார். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தீவிர களப்பணியாற்றிவர் பெங்களூரு புகழேந்தி. ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் கர்நாடகா மாநில அதிமுக செயலாளராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்தார்.
அண்மையில் டிடிவி தினகரனுடன் புகழேந்திக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அமமுகவில் இருந்து விலகலாம் என்று கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் புகழேந்தி, தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்துள்ளார்.
இதனிடையே நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இமாலய வெற்றிபெற்றதற்காக முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என சேலத்தில் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்த பின் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.