ஜெயலலிதா சிறையில் இருந்த போது எடப்பாடி செய்த துரோகம் கொஞ்சமா நஞ்சமா.. உடைக்கும் புகழேந்தி!
சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள் குறித்து விரைவில் வெளியிடப்படும் என பெங்களூர் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த பெங்களூர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் பக்கம் சென்றார். அங்கு சில நாட்கள் இருந்த நிலையில் டிடிவி தினகரனுடனான மோதல் போக்கால் அவர் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார்.
இதையடுத்து அப்போது அதிமுகவுடன் கூட்டணியிலிருந்த பாமகவை ஒரு டிவி விவாதத்தில் புகழேந்தி விமர்சித்ததை அடுத்து அவரை ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியை விட்டே நீக்கினர்.

அதிமுகவின் ஒற்றைத் தலைமை
இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான பஞ்சாயத்து ஏற்பட்ட போது ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்த புகழேந்தி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அன்று முதல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவர் எடப்பாடி பழனிசாமியையும் முன்னாள் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சேலத்தில் பெங்களூர் புகழேந்தி
இந்த நிலையில் சேலத்தில் பெங்களூர் புகழேந்தி கூறுகையில், அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், செம்மலை போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நின்று எப்படி வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதே எனக்கு தெரிவில்லை. எடப்பாடி பழனிசாமியை யாருமே ஏற்கவில்லை.

ஜாதி பெயர்
ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்கிறார்கள். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் என்றாவது ஜாதி பெயரை சொல்லி அரசியல் பேசியுள்ளனர்களா? எடப்பாடி பழனிசாமியின் பின்புலமாக யார் உள்ளார்கள் என்பதும் யார் சொல்லி அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது பொதுவெளியில் வரும்.

ஜெயலலிதா சிறை
ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களை விரைவில் வெளியிடுவோன். எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி தொகுதியில் வென்று காட்ட முடியுமா? நானும் போட்டியிடுகிறேன் யார் வெல்கிறார்கள் என்பதை பார்ப்போம். இவ்வாறு பெங்களூர் புகழேந்தி பேசினார். புகழேந்தி சேலத்தில் பேட்டி அளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். மதுரைக்கு வராதீர் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யாரோ போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications