ஜெயலலிதா சிறையில் இருந்த போது எடப்பாடி செய்த துரோகம் கொஞ்சமா நஞ்சமா.. உடைக்கும் புகழேந்தி!
சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள் குறித்து விரைவில் வெளியிடப்படும் என பெங்களூர் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த பெங்களூர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் பக்கம் சென்றார். அங்கு சில நாட்கள் இருந்த நிலையில் டிடிவி தினகரனுடனான மோதல் போக்கால் அவர் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார்.
இதையடுத்து அப்போது அதிமுகவுடன் கூட்டணியிலிருந்த பாமகவை ஒரு டிவி விவாதத்தில் புகழேந்தி விமர்சித்ததை அடுத்து அவரை ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியை விட்டே நீக்கினர்.

அதிமுகவின் ஒற்றைத் தலைமை
இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான பஞ்சாயத்து ஏற்பட்ட போது ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்த புகழேந்தி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அன்று முதல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவர் எடப்பாடி பழனிசாமியையும் முன்னாள் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சேலத்தில் பெங்களூர் புகழேந்தி
இந்த நிலையில் சேலத்தில் பெங்களூர் புகழேந்தி கூறுகையில், அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், செம்மலை போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நின்று எப்படி வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதே எனக்கு தெரிவில்லை. எடப்பாடி பழனிசாமியை யாருமே ஏற்கவில்லை.

ஜாதி பெயர்
ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்கிறார்கள். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் என்றாவது ஜாதி பெயரை சொல்லி அரசியல் பேசியுள்ளனர்களா? எடப்பாடி பழனிசாமியின் பின்புலமாக யார் உள்ளார்கள் என்பதும் யார் சொல்லி அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது பொதுவெளியில் வரும்.

ஜெயலலிதா சிறை
ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களை விரைவில் வெளியிடுவோன். எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி தொகுதியில் வென்று காட்ட முடியுமா? நானும் போட்டியிடுகிறேன் யார் வெல்கிறார்கள் என்பதை பார்ப்போம். இவ்வாறு பெங்களூர் புகழேந்தி பேசினார். புகழேந்தி சேலத்தில் பேட்டி அளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். மதுரைக்கு வராதீர் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யாரோ போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications