இன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி
சேலம்: இன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டு போய்விடுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த காலங்களில் மிட்டா மிராசுதாரர், தொழிலதிபர் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றியவரும் எம்.ஜி.ஆர் . வாழ்ந்தவர் கோடி, வளர்ந்தவர் கோடி என்ற பாடல் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். அறிஞர் அண்ணாவிற்கு புகழ் சேர்த்த பெருமை எம்.ஜி.ஆர்-க்கு மட்டுமே உள்ளது.

இன்றைய படங்கள் அன்றைய எம்.ஜி.ஆர் படங்களைப் போல உயிரோட்டம் இல்லை. திரைப்படங்களின் வாயிலாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் எம்ஜிஆர்.புகுத்தினார். ஆனால் இன்றைக்கு திரைப்படங்களை பார்த்தாலே பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications