கமிஷன் அதிகம் கேட்கிறார்கள்! டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்கள் தயாராக இல்லை! எடப்பாடி பழனிசாமி புகார்!
சேலம்: தமிழகத்தில் கிராமம் தொடங்கி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் கமிஷன் அதிகம் கேட்கப்படுவதால் டெண்டர் எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கோவையில் ரூ.48 கோடி மதிப்பில் 133 வேலைகளுக்கு 11 முறை டெண்டர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக போராடி திமுக என்ன சாதித்துவிட்டது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

சேலத்தில் எடப்பாடி
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை என எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு போனார். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, என மக்களை பற்றி எதுவும் கவலைப்படாமல் திமுக அரசு உயர்த்தி வருவதாகவும் இந்தச் சுமையை தாங்க கூடிய சக்தி மக்களுக்கு கிடையாது எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வருவதாக கூறினார்.

அதிக கமிஷன்
தமிழகத்தில் கிராமம் தொடங்கி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் கமிஷன் அதிகம் கேட்கப்படுவதால் டெண்டர் எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை என்ற பரபரப்பு புகாரை முன்வைத்த அவர், கோவையில் மட்டும் ரூ.48 கோடி மதிப்பில் 133 வேலைகளுக்கு 11 முறை டெண்டர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மிகவும் மெத்தனமான ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் சடினார்.

மக்கள் கொதிப்பு
சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி இதனால் மக்கள் கொதித்து போய் உள்ளதாக கூறினார். மேலும், மத்திய அரசுக்கு எதிராக போராடி திமுக என்ன சாதித்துவிட்டது என்ற கேள்வியை முன் வைத்த அவர், நீட் தேர்வை திமுக அரசால் ரத்து செய்ய வைக்க முடிந்ததா என செய்தியாளர்களை நோக்கி எதிர் கேள்வி எழுப்பினார். திமுக எம்.பி.க்கள் இந்த விவகாரத்திற்காக என்ன செய்தார்கள் எனக் கேட்டார்.

அதிமுகவில் பிரச்சனையில்லை
காவிரி நதிநீர் பிரச்சனையின் போது 22 நாட்கள் அதிமுக எம்.பி.க்கள் அவையை முடக்கியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எழுச்சியுடன் பொதுக்கூட்டங்கள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications