சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா.. மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் பேட்டி
சேலம்: சென்னையில் கொரோனா வைரஸ் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நோயாளிகள் எண்ணிக்கை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், தமிழக அரசு. கொரோனா நோயாளிகளை கவனத்துடன் கையாள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 36841 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் சுமார் 120 பேர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர். தினமும் உயிரிழப்பும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

விஜயபாஸ்கர் பேட்டி
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சை சரியான திசையில் செல்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் சிறப்பான பணி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். எனவே ‘கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.

ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பு
அரசு கொரொனா தொற்று நோயாளிகளை கவனமுடன் கையாண்டு வருகிறது. மருத்துவக் குழு பரிந்துரையின் பேரிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனை காரணமாகவே அதிக நோய்த்தொற்று ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்தி வருகிறோம்.

மத்திய அரசு அறிவிக்க வேண்டும்
சேலத்தில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் மருத்துவர்கள் மருத்துவக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எளிதில் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய 11 வகை நபர்களை கண்டறிந்து மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து வருகிறோம். சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்' இவ்வாறு கூறினார்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications