சேலம் சிறைக்கு நெல்லை கண்ணன் மாற்றம்.. 24 மணி நேரத்திற்குள் 750 கி.மீ பயணம்.. ஆதரவாளர்கள் அதிருப்தி
Recommended Video
சேலம்: நெல்லை கண்ணன், பாளையங்கோட்டை சிறைச்சாலையிலிருந்து சேலம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசிய, தமிழறிஞர் நெல்லை கண்ணன், நேற்று இரவு பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார்.

பிறகு அவர் நெல்லை அழைத்து வரப்பட்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டடது. பிறகு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நெல்லை கண்ணனை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரினர். அதே நேரத்தில், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நெல்லை கண்ணன் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பாபு, நெல்லை கண்ணனை வரும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவித்தார்.
இதையடுத்து, மதியம் 2 மணி அளவில் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் நெல்லை கண்ணன். ஆனால், பிறகு அங்கும் அவரை அடைக்காமல், சேலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நெல்லை கண்ணன் நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தவர். இந்த நிலையில், அவர் பெரம்பலூரிலிருந்து, நேற்று இரவோடு நெல்லை அழைத்து வரப்பட்டாார். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்பிறகு, நெல்லை, பாளையம்கோட்டை சிறைக்கும், பிறகு சேலம் சிறைக்கும், மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூரிலிருந்து திருநெல்வேலிக்கு சுமார் 360 கி.மீ தூரம். நெல்லையிலிருந்து, சேலத்திற்கு, சுமார் 385 கி.மீ தூரம். ஆக மொத்தம் வெறும் 24 மணி நேரத்திற்குள்ளாக, 750 கி.மீ தூரத்திற்கு, நெல்லை கண்ணன் சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கு அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications