முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார்.

Recommended Video

    தாய் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - வீடியோ

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93) வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    tamil nadu chief minister edappadi palanisamys mother passed away in salem

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சேலம் மருத்துவமனையில் நேற்று காலமானார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் சென்றார். இதனால் தற்காலிமாக அவரது தூத்துக்குடி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கடி தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்று தாயார் தவசாயி அம்மாளை அக்கறையுடன் கவனித்து வந்தார். அவரது மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரின் தாயாரின் மறைவு செய்தி கேட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+