ஆவின் பால் வாங்குறது இல்லை! அதனால எனக்கு பால் விலையேற்றம் குறித்து தெரியாது! கார்த்தி சிதம்பரம் ஓபன்
சிவகங்கை : நான் ஆவினிலோ தனியார் நிறுவனத்திடமோ சென்று பால் பொருட்கள் வாங்கியது இல்லை. அதனால் ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம் குறித்து எனக்குத் தெரியாது என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் மூலம் 1.25 கோடி லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால்ஆவின் மூலம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

பால் விலை
பால் விற்பனையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 % ஆக உள்ளது. மீதமுள்ள 16% மட்டுமே அரசு நிறுவனமான ஆவினின் விற்பனையாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக பால் விற்பனை விலையை உயர்த்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டில் மட்டும் 3வது முறையாக தனியார் பால் லிட்டருக்கு ரூ.4 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால்
தனியார் பால் லிட்டருக்கு ரூ.60 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஆவின் பால் ரூ.40 முதல் ரூ.51 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் ஆவின் பாலை வாங்க தொடங்கியுள்ளனர். அதே போல் விலை உயர்வால் வீடுகளிலும் தனியார் பாலுக்கு பதிலாக ஆவின் பாலை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம்
இந்நிலையில் நான் ஆவினிலோ தனியார் நிறுவனத்திடமோ சென்று பால் பொருட்கள் வாங்கியது இல்லை. அதனால் ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம் குறித்து எனக்குத் தெரியாது என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.

வாங்குவதில்லை
அதில்,"ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம் குறித்து எனக்குத் தெரியாது. நான் ஆவினிலோ, தனியார் நிறுவனத்திடமோ சென்று பால் பொருட்கள் வாங்கியது இல்லை. சட்டம் தெரிந்தவர்கள் நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிப்பதில் எந்தவித தவறும் இல்லை. தமிழ்நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை.இருப்பினும் வருமானத்திற்காக வரிகளை உயர்த்த தமிழக அரசு விரும்பாததால், மின் கட்டணம் போன்ற ஒரு சில பொருள் சேவைக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது" என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications