ஒரு வாரத்திற்கு ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணையை வெளியிடுவோம்.. குட் நியூஸ் சொன்ன பிசிசிஐ!
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு பின் சூழலை ஆய்வு செய்து, அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, பின்னர் ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு திடீரென பதான்கோட் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், அணியின் உரிமையாளர்கள் உட்பட அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஐபிஎல் நிர்வாகிகளின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போதே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.
இதனால் ஆர்சிபி, மும்பை உள்ளிட்ட அணிகளின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் தொடர் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடர் உடனடியாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின், சூழலை ஆய்வு செய்யப்படும்.
அப்போது மத்திய அரசு, ஐபிஎல் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்து புதிய அட்டவணையை வெளியிடுவோம். பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள், வீரர்களின் உணர்வுகள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் ஆகியோரின் கருத்துகளை கூறினர். அனைத்து தரப்பினரும் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
முக்கியமான இந்த நேரத்தில் பிசிசிஐ தேசத்துடன் இணைந்து நிற்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பின் சூழல் கட்டுக்குள் வந்தால், தென்னிந்திய மைதானங்களில் போட்டியை நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் சாதகத்தை இழக்க நேரிடும் என்று பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications