Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு வாரத்திற்கு ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு.. புதிய அட்டவணையை வெளியிடுவோம்.. குட் நியூஸ் சொன்ன பிசிசிஐ!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு பின் சூழலை ஆய்வு செய்து, அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, பின்னர் ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு திடீரென பதான்கோட் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது.

BCCI has decided to suspend the IPL for a week with immediate effect says Rajeev Shukla

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், அணியின் உரிமையாளர்கள் உட்பட அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஐபிஎல் நிர்வாகிகளின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போதே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

இதனால் ஆர்சிபி, மும்பை உள்ளிட்ட அணிகளின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் தொடர் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடர் உடனடியாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின், சூழலை ஆய்வு செய்யப்படும்.

அப்போது மத்திய அரசு, ஐபிஎல் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்து புதிய அட்டவணையை வெளியிடுவோம். பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள், வீரர்களின் உணர்வுகள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் ஆகியோரின் கருத்துகளை கூறினர். அனைத்து தரப்பினரும் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

முக்கியமான இந்த நேரத்தில் பிசிசிஐ தேசத்துடன் இணைந்து நிற்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பின் சூழல் கட்டுக்குள் வந்தால், தென்னிந்திய மைதானங்களில் போட்டியை நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் சாதகத்தை இழக்க நேரிடும் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+