5 மணிக்கு குஜராத்! 7 மணிக்கு மும்பை! அதெப்படி திமிங்கலம்? ஹர்திக் பாண்டியா அணி மாறியது எப்படி? ஏன்?
சென்னை: நேற்று 2024 ஐபிஎல் தொடருக்கான ரிட்டேஷன் நடந்தது. இதில் ஹர்திக் பாண்டிய அணி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை வைத்துதான் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றன.
மாலை 5 மணிக்கு நிலவரம்: நேற்று நிலவரத்தின்படி மாலை 5 மணிக்கு குஜராத் அணி மூலம் அவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் அவர் குஜராத் அணியில்தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7 மணிக்கு அவர் மும்பை அணிக்கு ஆல் கேஷ் டீலில் மாற்றப்பட்டார்.
இது எப்படி நடந்தது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டது. அதேபோல் அவரை ஏன் பின்னர் குஜராத் ரீ டெயின் செய்தது என்ற கேள்வியும் எழுந்தது. இது பற்றி பிசிசிஐ வட்டாரங்கள் வேறு தகவல்களை நம்மிடம் தெரிவித்துள்ளன.

அதன்படி...குஜராத் அணி உள்ளிட்ட எல்லா அணிகளுக்கும் முதலில் ரிட்டென்சன் தொடர்பான உத்தரவு சென்றுள்ளது. அதாவது ரிட்டென்சன் லிஸ்டை முதலில் வெளியிட வேண்டும். பின்னர் டிரேட் லிஸ்டை வெளியிட வேண்டும். அதாவது ஒரு வீரருக்கு பதிலாக இன்னொரு வீரரை எடுப்பது. இது பிரச்சனை இல்லை.
மூன்றாவதாக ரிட்டென்சன் முடிந்துதான் ஒரு வீரரை காசு பெற்றுக்கொண்டு கேஷ் டீலிங்கில் வேறு அணிக்கு மாற்ற முடியும் என்று பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஹர்திக் பாண்டியா விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம்.. அவரை ரிட்டென்சன் செய்யாமல் ரிலீஸ் செய்துவிட்டால் அவர் குஜராத் அணிக்கு சொந்தக்காரர் கிடையாது.
அவர் தானாக பொது சொத்து ஆகிவிடுவார் .. ஏலத்திற்கு வந்துவிடுவார். ரிட்டென்சன் செய்யாமல் இருந்தால்.., குஜராத் அணியால் அவரை பணத்திற்கு மும்பை அணிக்கு கொடுக்க முடியாது. அதனால் அவரை விற்க வேண்டும் என்றால் முதலில் குஜராத் அணி ரிட்டென்சன் செய்ய வேண்டும்.

ரிட்டென்சன் : இதன் காரணமாகவே முதலில் ஹர்திக் பாண்டியனை ரிட்டென்சன் செய்தது குஜராத் அணி. அதன்பின் அவரை தங்கள் உரிமையாக்கிய பின் மும்பை அணிக்கு ஆல் கேஷ் டீலிங்கில் விற்பனை செய்துள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்சி + கூடுதல் பணம் + விளம்பர ஆதரவு வந்தது. இந்த காரணத்தினால் மட்டுமே இந்த முடிவை ஹர்திக் எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார் என்று கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications