அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்
மும்பை: ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகும் முடிவை எடுத்த பின், மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரான அம்பானி குடும்பத்திடம் இருந்து மிகப்பெரிய ஆஃபர் வந்ததாக சஞ்சு சாம்சன் தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார். அதன்பின் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளில் இருந்தும் சஞ்சு சாம்சனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும், சிஎஸ்கே அணி கடைசியாகவே சீனில் வந்தது என்று தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் நாயகனாக சஞ்சு சாம்சன் மாறி இருக்கிறார். இந்திய அணிக்காக ஹாட்ரிக் அரைசதம் விளாசி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் சஞ்சு சாம்சனை கொண்டாடி வருகின்றனர். இப்படியான சூழலில் சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதில் மார்ச் 30ஆம் தேதி சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதாவது கடந்த சில ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்திய அணியை எதிர்த்து சிஎஸ்கே அணிக்காக இம்முறை விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தந்தை விஸ்வநாத் அளித்துள்ள பேட்டியில், எனது மகனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் எல்லாவற்றையும் கொடுத்தது. அங்கு ஒரு ராஜாவை போல் பார்த்து கொண்டனர். தலையில் கிரீடம் மட்டும்தான் வைக்கவில்லை. ஆனால் காலம் போக போக, சஞ்சு சாம்சன் சில விஷயங்களை புரிந்து கொண்டார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு விருப்பம் உள்ளது என்பது தெரிந்தது. அப்போது என்னிடம் வந்து நாம் ராஜஸ்தான் அணியில் இருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார். ஏனென்றால் மும்பை ரஞ்சி அணியின் கேப்டன்சியை பெற ஜெய்ஸ்வால் தீவிரமாக இருக்கிறார். ரியான் பராக் ஏற்கனவே அசாம் அணியை வழிநடத்தி வருகிறார்.
அவர்கள் இருவருமே திறமையான வீரர்கள்.. அதனால் ராஜஸ்தான் அணியில் இருந்து காலம் தாழ்த்தாமல் வெளியேறுவது சிறந்த முடிவாக கருதினார்.. அந்த முடிவை எடுத்த பின், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளிடம் இருந்து மிகப்பெரிய ஆஃபர் வந்தது.. அப்போது சிஎஸ்கே அணி சீனிலேயே இல்லை..
ஆனால் எல்லாம் சரியாக அமைந்து, என் மகன் சிஎஸ்கே அணிக்காக ஆடப் போகிறார் என்று தெரிவித்துள்ளார். கேகேஆர் மற்றும் டெல்லி அணிகள் கேப்டன் பதவியை கொடுக்க முன் வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணியில் ஒரு வீரராகவே விளையாட சஞ்சு சாம்சன் முடிவு எடுத்து இணைந்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications