மவுசு குறையாத ஆர்.கே. நகர் தொகுதி.. இடைத் தேர்தலில் 10 கட்சிகள் களத்தில்… படுஜோர் போட்டி
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. 10 கட்சிகள் இங்க போட்டியிட உள்ளன.
ஜெயலலிதா போட்டியிட்ட உடன் ஆர்.கே. நகர் சென்னையின் நட்சத்திர தொகுதியாக மாறிவிட்டது. தற்போது அவர் இறந்ததையடுத்து ஏற்பட்ட காலி இடத்தை நிரப்ப அதே நட்சத்திர அந்தஸ்து குறையாமல் கட்சிகள் இடைத் தேர்தலில் களம் இறங்க தயாராகி வருகின்றன.
1977ம் ஆண்டுதான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக, அதிமுக, ஜனதா, இந்திரா காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகள் மோதின. கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 6 முனை போட்டியை ஆர்.கே. நகர் சந்தித்தது.

அதிமுகவும் திமுகவும்
தமிழகத்தில் தேர்தல் என்றாலே அது திமுகவிற்கும் அதிமுகவிற்கும்தான் என்பதை கடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நமக்கு தெளிவாக உணர்த்தின. அதே போன்று இந்த தேர்தலிலும் ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுகவிற்குத்தான் கடும் போட்டி.

களத்தில் ஓபிஎஸ் அணி
அதிமுக இரண்டாக பிளந்து ஓபிஎஸ் அணியாகவும், சசிகலா அணியாக சண்டையிட்டு வருகின்றன. இந்த இரண்டு அணிகளும் தனித்தனியாக தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்க தயாராகி வருகின்றன.

திடீர் தீபா
ஜெயலலிதா மறைந்ததால் திடீரென்று அரசியலில் குதித்துள்ள தீபாவும் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதாக அத்தை செத்த உடனேயே அறிவித்துவிட்டார். ஜெயலலிதா போல் உருவச்சாயல் உள்ள தன்னை மக்கள் ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என்ற கனவோடு களம் இறங்குகிறார் தீபா.

டீம்ல இருக்கோம்..
இந்த இடைத்தேர்தலில் பாஜகவும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து பாஜக இந்தத் தொகுதியில் போட்டியிட்டது போன்று இந்த தேர்தலிலும் போட்டியிடுவது உறுதி என்று மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

சும்மாங்காட்டியும்…
தேமுதிகவை கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய இடைத்தேர்தல்களிலும் மோசமான தோல்வியையே சந்தித்தது. குப்புற விழுந்தாலும், எழுந்து நின்று தேர்தலில் நிற்கத் தயாராகி வருகிறார் விஜயகாந்த்.

இதுதவிர..
பாமகவும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் வேட்பாளரை நிறுத்த அதன் தலைவர்கள் தயாராகிவிட்டனர். அப்புறம் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று சீமானும் அறிவித்துவிட்டார்.
இதுவரை நடைபெற்ற தேர்தலின் அடிப்படையில் இந்தத் தொகுதியில் எத்தனைக் கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications