கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 5 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், விரட்டியடிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இதனை தடுத்து நிறுத்தக்கோரி மீனவர்கள் மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு, சிறைபிடித்து செல்லபடுகின்றனர்.
நேற்று ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 593 விசைப்படகுகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை பார்த்து எச்சரிக்கை விடுத்தனர். இங்கு மீன்பிடிக்க வரக் கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள் என கூறி அவர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசரமாக கரைக்கு திரும்பினர்.
இந்நிலையில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது படகில் 5 பேர் சேர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் சேர்த்து சிறைபிடித்து சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 120 பேர் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வரலாற்று ஆவணங்கள் நமக்கு சாதகமாக இருந்தும், டச்சு, போர்சுகீசிய மன்னர்கள் காலத்து வரைபட சாட்சியங்கள் இருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக 1954-ல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலேயே கூட இல்லாத கட்சத் தீவை, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் மூலம் தமிழக மீனவர்களை கண்ணீர்க் கடலில் தள்ளிய பெருமை நம் ஆட்சியாளர்களையே சேரும்.












Click it and Unblock the Notifications