27 வருடமாக... 75 வயது தொழிற்சங்கத் தலைவர் மீது 53 வயதுப் பெண் பரபரப்பு பாலியல் புகார்
சென்னை: கடந்த 27 வருடமாக என்னை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி வரும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 53 வயதுப் பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார் அந்த தொழிற்சங்கத் தலைவர். சென்னையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நபரின் பெயர் ரங்கராஜன். இவருக்கு இப்போது 75 வயதாகிறது. இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர் யூனியன் தலைவர் ஆவார்.
இவர் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், எனக்கு கடந்த 1978ல் திருமணம் நடந்தது. எனது கணவர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எங்களுக்கு 3 ஆண் குழந்தைகள். திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து ஒரு விபத்தில் எனது கணவர் மரணமடைந்தார். அவருக்கு பிறகு, எனக்கு கருணை அடிப்படையில் இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
தற்போதும் அங்கு பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், அந்த நிறுவனத்தில் உள்ள யூனியன் தலைவர் ரங்கராஜன் என்பவர், தனது பதவி அதிகாரத்தைக் காட்டி எனது வீட்டுக்கு அடிக்கடி வந்தார். இதனால் வெறுப்படைந்த எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதைத் தடுத்த ரங்கராஜன் என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்தார். அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து என்னை அவரின் கட்டாயத்துக்கு அடிபணியவைத்தார்.
குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு 27 ஆண்டுகாலம் அவருடன் அவரின் தொந்தரவை பொறுத்துக்கொண்டேன். தற்போது, எனக்கு 7 ஆண்டுகள் பணி உள்ளது. இந்நிலையில், என்னை உடல்ரீதியாக தொந்தரவு செய்வதுடன் வேலைக்கும் பிரச்னை ஏற்படுத்திவிடுவதாக மிரட்டுகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கூறியுள்ளார்.
இந்தப் புகார் அய்னாவரம் மகளிர் காவல் நிலையத்திற்குப் போனது. ஆனால் போலீஸார் கம்மென்று இருந்துள்ளனர். இதையடுதது அப்பெண் தற்போது எழும்பூர் கோர்ட்டை நாடியுள்ளார். இதை விசாரித்த கோர்ட், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது போலீஸார், ரங்கராஜன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ரங்கராஜன் முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் கோர்ட்டை நாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இரு தரப்பும் வருகிற 10ம் தேதி சமசரத் தீர்வு மையத்தை நாடி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications