13 வயது சிறுமிக்கு நள்ளிரவில் பிறந்த குழந்தை! பதறி போன பெற்றோர்! 76 வயதில் இப்படி ஒரு கொடூர வேலையா?
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அருகே 13 வயது சிறுமியை 76 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில் தற்போது நீதிமன்றம் 76 வயது முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் உறவினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்து வரும் சம்பவங்கள் பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேத்தியாகக் கருத வேண்டிய 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு குழந்தை பெற்றெடுக்கவும் காரணமாக இருந்த கொடூரனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

கொடூரம்
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ விசாரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் அவரது தாய் கூலி வேலைக்கு சென்று மகளை வளர்த்து வந்துள்ளார். தாய் வேலைக்குச் செல்லும் நேரத்தில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம்.

76 வயது முதியவர்
அப்போதுதான் அதே பகுதியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்ற எழுபத்தி ஆறு வயது முதியவர் வியாபாரம் தொடர்பாக சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது தந்தை இல்லாததை அறிந்து தான் தனது பேத்தியாக கருதி வளர்ப்பதாக கூறி சிறுமையை பார்க்கும் போதெல்லாம் அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். சிறுமியின் தாயும் 76 வயது முதியவர் தானே என சிறுமியிடம் பழக அனுமதித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில் சிறுமியிடம் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்துச் சென்ற முதியவர் அன்வர் பாஷா ஆசை ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக இந்த கொடூரம் நீண்டு இருக்கிறது. இதனால் 13 வயதிலேயே சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்குப் பிறகு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது.

நள்ளிரவில் குழந்தை
வயிற்றில் ஏதாவது கட்டி இருக்கும் என நினைத்து அவரது தாய் அருகில் உள்ள மருந்து கடையில் சிறுமிக்கு மாத்திரைகளை வாங்கித் தந்திருக்கிறார். வயிறு பெரிதாகிக் கொண்டே இருந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி வயிற்று வலியால் அலறி துடிக்க அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது சிறுமியிடம் இது குறித்து கேட்டபோது பல மாதங்களாக முதியவர் அன்வர் பாஷா தன்னை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்த குறித்து சிறுமி கூறியுள்ளார்.

23 ஆண்டுகள் சிறை
இதையடுத்து அவரது தாய் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதியவர் அன்வர் பாஷா மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அன்வர் பாஷாவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணையானது வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது விசாரணை முடிவில் அன்வர் பாஷா மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டு சிறை தண்டனையும் போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனை பத்தாயிரம் அபராதம் என மொத்தம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை அன்வர் பாஷாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications