என்ன கொடுமை சார் இது? 12 வயது சிறுமிக்கு ‘குழந்தை’! கட்டிட தொழிலாளியை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால் கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சங்கிலி குப்பம் கிராமத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவி. இவர் ஆம்பூரில் உள்ள தனியார் நிதி உதவி மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சீனி என்கிற சீனிவாசன் (வயது 20) என்பவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருப்பத்தூரில் அதிர்ச்சி
இந்த கொடுமை பல மாதங்களாக நீடித்த நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். சிறுமியின் வயிறு பெரிதாக இருந்த நிலையில், வயிற்றில் ஏதோ கட்டி இருக்கலாம் என நினைத்து சிறுமியின் பெற்றோரும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மாணவி தன்னுடைய தாயிடம் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளர்.

மாணவிக்கு பிரசவம்
இதனையடுத்து அவரது பெற்றோர் மாணவியை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் திருப்பத்தூர் மாவட்ட சமூகப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொத்தனார் கைது
தகவலின் பேரில் சமூகப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாணவியின் பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் தாய் மூலம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மாணவியை கர்ப்பமாக்கிய சீனு என்கிற சீனிவாசனை போலீஸார் கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications