Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன கொடுமை சார் இது? 12 வயது சிறுமிக்கு ‘குழந்தை’! கட்டிட தொழிலாளியை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால் கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சங்கிலி குப்பம் கிராமத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவி. இவர் ஆம்பூரில் உள்ள தனியார் நிதி உதவி மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சீனி என்கிற சீனிவாசன் (வயது 20) என்பவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருப்பத்தூரில் அதிர்ச்சி

திருப்பத்தூரில் அதிர்ச்சி

இந்த கொடுமை பல மாதங்களாக நீடித்த நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். சிறுமியின் வயிறு பெரிதாக இருந்த நிலையில், வயிற்றில் ஏதோ கட்டி இருக்கலாம் என நினைத்து சிறுமியின் பெற்றோரும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மாணவி தன்னுடைய தாயிடம் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளர்.

மாணவிக்கு பிரசவம்

மாணவிக்கு பிரசவம்

இதனையடுத்து அவரது பெற்றோர் மாணவியை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் திருப்பத்தூர் மாவட்ட சமூகப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொத்தனார் கைது

கொத்தனார் கைது

தகவலின் பேரில் சமூகப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாணவியின் பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் தாய் மூலம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மாணவியை கர்ப்பமாக்கிய சீனு என்கிற சீனிவாசனை போலீஸார் கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+