என்ன கொடுமை சார் இது? 12 வயது சிறுமிக்கு ‘குழந்தை’! கட்டிட தொழிலாளியை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால் கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சங்கிலி குப்பம் கிராமத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவி. இவர் ஆம்பூரில் உள்ள தனியார் நிதி உதவி மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சீனி என்கிற சீனிவாசன் (வயது 20) என்பவர் மாணவியை ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருப்பத்தூரில் அதிர்ச்சி
இந்த கொடுமை பல மாதங்களாக நீடித்த நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். சிறுமியின் வயிறு பெரிதாக இருந்த நிலையில், வயிற்றில் ஏதோ கட்டி இருக்கலாம் என நினைத்து சிறுமியின் பெற்றோரும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி மாணவி தன்னுடைய தாயிடம் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளர்.

மாணவிக்கு பிரசவம்
இதனையடுத்து அவரது பெற்றோர் மாணவியை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் திருப்பத்தூர் மாவட்ட சமூகப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொத்தனார் கைது
தகவலின் பேரில் சமூகப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாணவியின் பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் தாய் மூலம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மாணவியை கர்ப்பமாக்கிய சீனு என்கிற சீனிவாசனை போலீஸார் கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications