அடப்பாவிகளா.. குழந்தை கடத்தல்காரர் என நினைத்து மன நலம் பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை
திருவள்ளூர் அருகே குழந்தை கடத்தும் நபர் என கூறி மனநிலை பாதிக்கப்பட்ட நபரை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருவள்ளூர்: குழந்தை கடத்தும் நபர் என கூறி மனநிலை பாதிக்கப்பட்ட நபரை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக குழந்தை கடத்தும் வட மாநில கும்பல் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் சுற்றி வருவதாக வாட்ஸ்ஆப்பில் தகவல் பரவி வருகிறது.
இதனால் பல இடங்களில் புதிதாக வரும் அடையாளம் தெரியாத நபர்களை கிராம மக்கள் அடித்து உதைத்து துன்புறுத்தி வருகின்றனர்.

மூதாட்டி அடித்து கொலை
நேற்று திருவண்ணாமலை மாவட்டம் அத்திமூரில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்ற 65 வயது மூதாட்டியை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்.

4 தனிப்படைகள் அமைப்பு
படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 67 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலத்தில் தொங்கவிட்டு
இந்நிலையில் திருவள்ளூர் அருகே குழந்தை கடத்தும் நபர் எனக்கூறி 30 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட நபரை கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர். அவரின் உடலை பாலத்தில் இருந்து தொங்கவிட்டுள்ளனர்.

கண்களை தோண்டி
மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நபர் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அவரை குழந்தை கடத்தும் நபர் என கூறி அடித்து உதைத்த பொதுமக்கள் அந்த நபரின் கண்களை தோண்டியும் மூக்கை உடைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பெரும் அதிர்ச்சி
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பி எச்சரிக்கை
இதனிடையே திருவள்ளூர் மாவட்ட மக்கள் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும், வட மாநில மக்கள் மீது சந்தேகம் இருந்தால் புகார் அளிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகத்தின் பேரில் அவர்களை அடித்துத் துன்புறுத்தக் கூடாது என்றும் சிபிசக்கரவர்த்தி எச்சரித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications