இன்ஸ்பெக்டரை அவன் இவன் என்று திமிராக பேசிய அதிமுக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்கு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாம்சனை தொலைபேசியில் அவன் இவன் என்றும் தொலைத்து விடுவேன், கொன்று விடுவேன் என்றும் அடாவடியாக, திமிராகப் பேசிய அதிமுக ஒன்றியச் செயலாளர் உதயக்குமார் என்பவர் மீது மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை நடவடிக்கைகளில் கட்சியினர் குறுக்கீடு இருக்காது, அவர்கள் காவல்துறையினரை மிரட்ட மாட்டார்கள், ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுவது வழக்கம். ஆனால் களியக்காவிளை காவல் நிலைய இன்ஸ்பெக்டரைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் ஒரு அதிமுக பிரமுகர் பேசிய பேச்சைக் கேட்ட அத்தனை பேரும், அடக் கொடுமையே என்று கொதித்துப் போயுள்ளனர்.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழகத்தில் இன்னும் எத்தனை எத்தனை காவல்துறையினர் அதிமுகவினரால் இப்படி மிரட்டலுக்குள்ளானார்களோ என எண்ண வைத்துள்ளது இந்த ஆடியோப் பேச்சு.
களியக்காவிளை பஸ் நிலையம் அருகில், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுகவினர் பேனர் வைத்து இருந்தனர். இதை களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சாம்சன் அகற்றினார்.
இதை அறிந்து கோபம் கொண்டார் மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலாளர் உதயகுமார். உடனே செல்லை எடுத்தார் இன்ஸ்பெக்டர் சாம்சனை போனில் தொடர்பு கொண்டார்.
ஏன் பேனரை எடுத்தீர்கள் என்று ஆரம்பித்து அப்படியே தாறுமாறாக பேசத் தொடங்கினார். அவன் இவன் என்றும் தொலைத்து விடுவேன் என்றும் ஒழித்து விடுவேன் என்றும் ஒரு ரவுடி ரேஞ்சுக்குப் பேசியுள்ளார்.
ஆரம்பத்தில் அவருக்கு மிகப் பொறுமையாக பதிலளித்து வந்த இன்ஸ்பெக்டர் சாம்சன், கடைசியில் சற்றே கோபமடைந்து சரி சரி ஸ்டேஷனுக்கு வா பேசிக் கொள்ளலாம் என்று பதிலளிக்கிறார்.
இவ்விவகாரம் வாட்ஸ்அப்பில் வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கியது. அதிமுகவினர் எந்த அளவுக்கு காவல்துறையினரை மிரட்டுகின்றனர் என்பதையும் இந்த ஒரு சம்பவம் அம்பலப்படுத்தியது.
மேலும் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் சூடான விவாதத்திற்குள்ளானது. பலரும் இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக களம் குதித்தனர்.
இதுதான் அந்த ஆடியோ பேச்சு...
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சாம்சனிடம் மாவட்ட எஸ்.பி.தர்மராஜன் நேற்று விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து உதயகுமார் மீது சாம்சன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில், ஐபிசி 189 (செல்போனில் பேசி மிரட்டல்), 506 (1) (கொலை செய்வேன் என மிரட்டல்) உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications