"அதிமுக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா" கோஷத்துக்கு முற்றுப்புள்ளி!
இரட்டை இலை கிடைக்காமல் போய் விட்டதால் இனி தியாகத் தலைவி அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா என்ற கோஷத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: அதிமுக கட்சி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி அணிக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் இனி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் சசிகலா. இதன் பிறகு ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வந்தார். தலைமை செயலகத்தில் அறை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சசிகலாவுக்கு பரப்பன அக்ரஹார சிறையில்தான் அவருக்கு அறை கிடைத்தது.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் சசிகலா நீடிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தேர்தல் ஆணையம் முடக்கியது
இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி, ஓபிஎஸ் என இரு அணிகளும் சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதுதொடர்பாகவும் இரு அணிகளும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

இரு அணிகளும் இணைப்பு
அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து பொதுக் குழு கூடியது. அதில் பொதுச் செயலாளர் என்றால் அது ஜெயலலிதாதான். எனவே அந்த பதவி இனி அதிமுகவில் இருக்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகல்களுடன் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த இரட்டை இலை சின்னத்தை வாபஸ் பெற்று ஒன்றாக தாக்கல் செய்தனர்.

மீண்டும் துளிர் விட்ட சின்னம்
தினகரன் அணியனர் எப்போது பேசினாலும் தியாகத் தலைவி பொதுச் செயலாளர் சின்னம்மா என்றே குறிப்பிட்டு வந்தனர். அதேபோல் தினகரனும் தன்னை அவ்வப்போது துணை பொதுச் செயலாளர் என்றும் கூறிக் கொள்வார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி- பன்னீர் அணிக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

சசிகலா பொதுச் செயலாளர் இல்லை
இனி சசிகலாவை பொதுச் செயலாளர் என்று அழைக்க முடியாதா. டிடிவி தினகரனுக்கு மூச்சுக்கு 300 முறை பொதுச் செயலாளர் பொதுச் செயலாளர் என்றே கூறி வரும் நிலையில் இனி அவ்வாறு கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications