4 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் வெள்ளம்... தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
4 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி மாவட்டம் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி : தொடர் மழை காரணமாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி மாவட்டம் வருசநாடு வைகை ஆற்றில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஓகி புயல் காரணமாக தென்தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெளுத்து வாங்கிறது. இதே போன்று பலத்த காற்றும் வீசியது.

புயல் மற்றும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான அணைகளில் நீர் நிரம்பிவிட்ட நிலையில், கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாகவும், மரங்கள் முறிந்து விழுந்ததாலும் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக தேனிமாவட்டம் வருசநாடு வைகை ஆற்றில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வருசநாடு அருகே மூல வைகை ஆற்றின் உற்பத்தி இடமான அரசரடி, வெள்ளிமலை, உடங்கல் ஆறு, அம்மாகஜம், வாலிப்பாறை, தும்மக்குண்டு, தண்டியக்குளம், காந்திக்கிராமம், முத்துநகர், முருக்கோடை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குடிநீர், பாசன பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்பதால் மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications