தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நாளை தாக்கல் செய்கிறது ஈபிஎஸ் அணி!
தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் நாளை தாக்கல் செய்யப்படுகின்றன.
டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை நாளை தாக்கல் செய்கிறது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலர் பதவி ரத்து செய்யப்படுகிறது; அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் மூலம் அதிமுகவின் நியமன பொதுச்செயலாளர் சசிகலாவின் பதவி முடிவுக்கு வந்தது. பின்னர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சசிகலா நீக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.
இந்த தீர்மானங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி பெயர், இரட்டை சிலை சின்னம், கொடி ஆகியவற்றுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் கடிதமும் தர இருக்கிறது.