For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரித்துப்போனதா மனித நேயம்? நெல்லை அரசு மருத்துவமனையில் முதியவர் குப்பையில் வீசப்பட்ட கொடூரம்

பராமரிக்க ஆள் இல்லாததால் நெல்லை அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் குப்பையில் வீசப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பரிதாபம்! அரசு மருத்துவமனையில் முதியவர் குப்பையில் வீசப்பட்ட கொடூரம்-வீடியோ

    நெல்லை: பராமரிக்க ஆள் இல்லாததாலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாலும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவரை மருத்துவமனை ஊழியர்கள் குப்பை மேட்டில் வீசிசென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

    திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தெரியாத முதியவர், ஆதரவற்ற நிலையில் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது வேலையை அவரால் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.

    An oldman was thrown away near dump in Thirunelveli

    இந்நிலையில் அவரின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாக இருந்த அவர் படுத்த படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழித்தார். அவரை பராமரிக்கவும் யாரும் முன்வரவில்லை.

    இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை மேட்டில் இன்று காலை அவரை ஊழியர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

    இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, குப்பை தொட்டி அருகே வீசப்பட்ட நபரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அரசு மருத்துவமனையே நோயாளியை குப்பை மேட்டில் வீசி சென்ற சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    An oldman who was getting treatment in Tirunelveli Government Hospital was thrown away in dump because of he is an orphan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X