காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா?... ரஜினிக்கு அன்புமணி கேள்வி
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா என்று ரஜினிக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த முடியுமா என்று ரஜினிக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 31-ஆம் தேதி அறிவித்தார். மேலும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும் அவர் அறிவித்தார். எனினும் அவரது ரசிகர்களை தவிர மற்ற யாரும் இவரை வரவேற்கவில்லை என கூறப்படுகிறது.

ஏனெனில், இவரது அரசியல் பிரவேசத்தின் பின்னால் பாஜக இருப்பதாகவும் இதுவரை தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு போராடியதில்லை என்றும் மற்ற அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் அவர் அரசியலுக்கு வந்தால் அந்த ஆட்சி பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியை போன்று இருக்கும் என்றும் கருத்து நிலவி வருகிறது. லோக்ஆயுக்தா மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை தமிழக அரசு கொண்டுவர வலியுறுத்தி, பாமக சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அருகில் இருந்தபோது சிஸ்டம் சரியில்லை என்பது ரஜினிக்கு தெரியாதா. அவர் அரசியலுக்கு வந்தால் சந்திக்கத் தயார்.
மத்திய அரசை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை ரஜினியால் அமைக்க முடியுமா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications