எல்லா விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு... ஓரம்கட்டப்பட்ட ஆவடிகுமார் வார்னிங்
டி.வி விவாதங்களில் அனுமதி அளிக்கப்படாதது குறித்து ஆவடி குமார் வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.
சென்னை : அதிமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வெளியாகி உள்ள பட்டியலில் தனது பெயர் இல்லாததால் தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார் அதிருப்தியில் உள்ளார்.
அதிமுக தலைமையகத்தில் இரண்டு நாட்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதன் பின், ஊடகங்களில் அதிமுக சார்பில் பேச அனுமதி அளிக்கப்பட்டோரின் பட்டியலை ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.

இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் உட்பட 12 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களை தவிர வேறு யாருக்கும் டி.வி விவாதங்களில் பேச அனுமதி இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பட்டியலில் தனது பெயர் இல்லாததால், அதிமுக தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார் அப்செட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி கடும் நெருக்கடியில் இருந்தபோது, முக்கிய நட்சத்திர பேச்சாளர்கள் எல்லாம் டி.டி.வி தினகரன் அணியில் இருந்துகொண்டு கடும் எதிர்ப்பு கொடுத்த போதும் விவாதங்களில் அதிமுகவை காப்பாற்றிய தனக்கு பட்டியலில் இடமில்லாததால் அவர் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.
தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் ஆவடி குமார் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை விரும்பாத சிலரின் தலையீட்டால் பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து வெளிப்படையாக புலம்ப முடியாத நிலையில், பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தனது கோபத்தை நாசூக்காக பதிவு செய்து உள்ளார் ஆவடி குமார். இதுகுறித்த பதிவு ஒன்றில், ஏமாற்றம் இல்லை; ஆனால், எல்லா விளைவுக்கும் எதிர்விளைவு உண்டு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, நேற்றுவெளியிட்டுள்ள பதிவில், 'தன்னுடைய அரசியல் பயணத்தை பச்சோந்திகள் தடுத்துவிடமுடியாது' என்று குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார் ஆவடி குமார். ஆனால், இதில் யாரை பச்சோந்தி என்று குறிப்பிடுகிறார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications