2000 நோட்டு அக்டோபரிலேயே வங்கிகளுக்கு வந்துடுச்சி.. 500 ரூபாய் ஏன் அனுப்பல.. வங்கி அதிகாரிகள் கேள்வி
2000 ரூபாய் புதிய நோட்டு அக்டோபர் மாதமே வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் 500 ரூபாய் நோட்டை ஏன் அனுப்பவில்லை என்று வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: கடந்த அக்டோபர் மாதமே 2000 ரூபாய் புதிய நோட்டுக்களை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. அதே போன்று புதிய 500 ரூபாய் நோட்டையும் அனுப்பாமல் விட்டது ஏன் என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதில் இருந்து கடுமையான பணத்தட்டுபாடு மக்களிடையே ஏற்பட்டது. மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பொதுமக்கள் வங்கிகளுக்குச் சென்று பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வந்தனர். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நீண்ட வரிசையில் நின்று அருகில் சென்ற பிறகு, புதிய ரூபாய் நோட்டுக்கள் இல்லை என்று பொதுமக்கள் பல வங்கிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இப்படி பணப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு அதிகப் பணத்தைக் கொடுத்துவிட்டு, பொதுத்துறை வங்கிகளுக்கு போதிய அளவு பணத்தைக் கொடுக்காததுதான் காரணம் என்று வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பணம் தொடர்பான பெரிய மாற்றம் ஒன்று கொண்டு வருவதற்கான திட்டம் ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை செய்யாமல் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விட்டுவிட்டது என்றும் வங்கி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதமே 2000 ரூபாய் புதிய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. புதிய அறிவிப்பால், சில்லறை நோட்டுக்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் 500 ரூபாய் புதிய நோட்டுக்களை முன்கூட்டியே வங்கிகளுக்கு வழங்கவில்லை என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 500 ரூபாய் நோட்டை முதலிலேயே அனுப்பி இருந்தால் இவ்வளவு மோசமான நிலை உருவாகி இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகக் குறைவான அளவிலேயே புதிய நோட்டுக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் பணத்தட்டுப்பாட்டை வங்கிகளால் போக்க முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் வங்கியில் இருந்து திரும்பிச் செல்கின்றனர். இதுபோன்ற நிலையை, ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது என்று வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications