கரூரில் நட்ட நடு ரோட்டில் "டமால்"னு ஒரு பள்ளம்..!
கரூர்: அதிக பாரம் ஏற்றிய லாரியும் செல்லவில்லை, கொட்டித் தீர்க்கும் வகையில் மழையும் பெய்யவில்லை. ஆனால் கரூரில் நட்ட நடு ரோட்டில் மிகப் பெரிய பள்ளம் திடீரென ஏற்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பள்ளம்னா உங்க வீட்டுப் பள்ளம், எங்க வீட்டுப் பள்ளம் இல்லை பாஸ்.. மாபெரும் பள்ளம். 20 பேரை உள்ளே உட்கார வைத்து விடலாம். அப்படி ஒரு பள்ளம்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று அரவக்குறிச்சி பகுதியில் 73 மி.மீட்டர் அளவும், கரூர் பரமத்தி பகுதியில் 151.6 மி.மீட்டர் அளவும் பதிவாகின. குளித்தலை 20 மி.மீட்டர், மாயனூரில் 44 மி.மீட்டரும் பதிவாகின. கரூரில் 69 மி.மீட்டர் அளவும் பதிவாகின, அனைப்பாளையம் 111 மி.மீட்டர் அளவும் பதிவாகின. கிருஷ்ணராயபுரத்தில் 42 மி.மீட்டர், மைலம்பட்டி பகுதியில் 85 மி.மீட்டர் அளவும் என கரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் மொத்தமாக சுமார் 804 மி.மீட்டர் அளவு பதிவாகின. சராசரி மழையளவு 67 விழுக்காடு ஆகும்.

இந்நிலையில் கரூர் இராஜாஜி நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பள்ளம் ஏற்பட்ட போது போக்குவரத்து அதிகம் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த திடீர் பள்ளத்தை கரூர் கலெக்டர் ஜெயந்தி, கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என பலரும் ஆய்வு செய்து மாற்று வழியில் மற்ற வாகனங்களை திருப்பி விட்டனர்.

இதே போல, கரூர் காவல் நிலையம் அருகே சி.எஸ்.ஐ அரசு உதவி பெரும் பள்ளியில் மழை நீர் குளம் போல தேங்கி காணப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும் இப்பகுதி மட்டுமில்லாமல் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகிலேயே உள்ள ரோட்டில் மழைநீர் ஏரி போல் வடியாமல் இருந்ததால் நோயாளிகளுக்கு மீண்டும் நோய் வருமோ என்ற அச்சத்தில் காணப்படுகின்றனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications