நாளைய 'பந்த்'-க்கு மட்டுமே ஆதரவு.. போராட்டங்கள் அத்தனைக்குமே எதிர்ப்பு... அடடே 'தமிழிசை' #tnbandh
சென்னை: அரசியலிலில் இப்படியெல்லாம் ஒரு நிலைப்பாடு எடுத்து அதை பகிரங்கமாக அறிவிக்கவும் நிச்சயம் துணிச்சல் தேவை... விவசாய, வணிகர் சங்கங்கள் நடத்தும் நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாரதிய ஜனதா ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால் நாளை முழு அடைப்பின் போது மத்திய அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்ப்பதாகவும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புடன் முழு அடைப்பு நாளை வெற்றிகரமாக நடைபெற உள்ளது. நாளை முழு அடைப்பின் போராட்டத்தின் போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட இயக்கங்கள் கண்டன முற்றுகைப் போராட்டங்கள் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இதனால் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்த பாஜக தற்போது பல்டி அடிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது:

ஆதரவு
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதாகவும் கடை அடைப்புப் போராட்டம் அமையும் என்றால் எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு. எந்த காலத்திலும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முதல் கட்சியாக பாஜக இருந்து வந்துள்ளது.

எதிர்ப்பு
அரசியல் கண்ணோட்டத்துடன் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட போவதாகவும், ரயில்களை மறிக்க போவதாகவும் சிலர் கூறி உள்ளனர். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

மத்திய அரசும் காவிரியும்
இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் காவிரி பிரச்சினையில் எந்த முடிவையும் எட்டாத நிலையில் இப்போதுதான் அந்த பிரச்சினை வந்தது போலவும் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது போலவும் சித்தரிக்க முயல்கிறார்கள். காவிரி பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு மறுத்தது. ஆனால் மத்திய நீர்வள அமைப்பு தேவையான தண்ணீர் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காப்பாற்றியது ராஜ்நாத்சிங்
தமிழகத்துக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு செயல்பட்டு இருக்கிறது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதும் துணை ராணுவ படையை அனுப்பி கலவரத்தை கட்டுப்படுத்தவும், தமிழர்களை காக்கவும் ராஜ்நாத்சிங் உடனடி நடவடிக்கை எடுத்தார். இப்படி தமிழர்களின் நலனுக்காக பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் போது எல்லா பழியையும் மத்திய அரசு மீது போடுவதை ஏற்க முடியாது. குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல் சிலர் அரசியல் ஆதாயம் தேடி முயல்வதை கண்டிக்கிறோம்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications