கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக ராஜா மீது வழக்கு.. உயர்நீதிமன்றக் கிளையில் போலீஸ் தகவல்
சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை காவல்துறையினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளனர்.
மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த அப்துல் கபூர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு செய்திருந்தார். அதில், எச்.ராஜா, கடந்த ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் இந்து தர்ம பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார், முஸ்லிம், கிருஸ்தவர்களை குறித்து தவறாக பேசியுள்ளார்.

இந்த பேச்சுக்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் எச்.ராஜா பேச்சு குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் இதே பொதுக்கூட்டம் குறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் சட்டம் ஒழங்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எச்.ராஜா மீது மதம், இனம், மொழி, ஜாதி குறித்த விரோத உணர்ச்சியை தூண்டிவிட முயற்சிப்பதாக கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்ததாக கூறப்பட்டது.
அரசு தரப்பில் பதில் மனு அளித்துள்ளதால் இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications