காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில்தான் இருக்க வேண்டும்- வேல்முருகன்
காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

நெய்வேலி : காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் முழுவதும் உச்சநீதிமன்றத்தின் கையில் இருக்க வேண்டும் என்றும், அதன் தலைமையகம் டெல்லியில்தான் அமைய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று நெய்வேலியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் அமைக்க வேண்டும்.

மே 14ம் தேதி சமர்பிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கையில், முக்கியத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கான தீர்ப்பு வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டும் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும், அதன் தலைமையகம் பெங்களூருவில் அமையக்கூடாது டெல்லியில்தான் அமைய வேண்டும். இது பெங்களூருவில் அமைந்தால் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.
தமிழக அரசு வழக்கறிஞர்கள் நாளையும் உறுதியாக உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும். மத்திய அரசின் எந்த வித காரணத்திற்கும் தமிழக அரசு இணங்கக்கூடாது என்றும், 19ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்காது என்றும் தெரிவித்துள்ளார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications