காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில்தான் இருக்க வேண்டும்- வேல்முருகன்
காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

நெய்வேலி : காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் முழுவதும் உச்சநீதிமன்றத்தின் கையில் இருக்க வேண்டும் என்றும், அதன் தலைமையகம் டெல்லியில்தான் அமைய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று நெய்வேலியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் அமைக்க வேண்டும்.

மே 14ம் தேதி சமர்பிக்கப்பட்ட திட்ட வரைவு அறிக்கையில், முக்கியத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கான தீர்ப்பு வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டும் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும், அதன் தலைமையகம் பெங்களூருவில் அமையக்கூடாது டெல்லியில்தான் அமைய வேண்டும். இது பெங்களூருவில் அமைந்தால் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள்.
தமிழக அரசு வழக்கறிஞர்கள் நாளையும் உறுதியாக உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும். மத்திய அரசின் எந்த வித காரணத்திற்கும் தமிழக அரசு இணங்கக்கூடாது என்றும், 19ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்காது என்றும் தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications