சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மண்டலத்தில் 99.58% தேர்வு

சென்னை மண்டலத்துக்குட்பட்ட சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று மாலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவு குறித்த முழு விவரங்களை அண்ணா நகரில் உள்ள சென்னை மண்டல அலுவலகத்தில் மண்டல அதிகாரி சுதர்சன்ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சென்னை மண்டலம், அந்தமான் மற்றும் நிக்கோபர், டாமன், கோவா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய 8 மாநிலங்களை உள்ளடக்கி உள்ளது.
சென்னை மண்டலத்தில் 1800 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 460 பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 279 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.
இதில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 99.7 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
ஜூலை 16ல் மறுதேர்வு
10-ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை கிரேடு முறை இருப்பதால் வெற்றி தோல்வி என்று கருத முடியாது. மேல் வகுப்புக்கு தகுதியானவர்கள் என்றுதான் கூறமுடியும். அந்த வகையில் 257 மாணவ-மாணவிகள் தகுதி பெறவில்லை. அவர்களுக்கு ஜூலை 16ம் தேதி மறுதேர்வு நடைபெறுகிறது.
மாணவிகள் தேர்ச்சி அதிகம்
தமிழ்நாட்டில் 28,589 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இதில் 28,572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.94 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாணவர்கள் 99.2 சதவீதமும், மாணவிகள் 99.98 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
புதுவையில் 100 சதவிகிதம்
புதுவை மாநிலத்தில் 964 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் முதல் இடத்தில் உள்ளது.வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஸ்கேனிங் முறை
இந்த முறை 10-ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் புதிய முறை பின்படுத்தப்பட்டது.
மாணவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டது. இதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
சி.பி.எஸ்.இ ப்ளஸ் டூ
சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு 28-ந் தேதிக்கு முன்னதாக வெளியாக வாய்ப்பு உள்ளது.
தேர்வு முடிவு தாமதத்தால் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரியில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்காமல் இருக்க வேண்டாம். தேர்வு முடிவு வந்த பின்னர் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய கல்வி வாரிய தலைவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று அவர் அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications