புறக்கணிக்கப்படும் புதுச்சேரி... வெள்ள நிவாரணத் தொகை இன்னும் வரவில்லை.. நாராயணசாமி
சென்னை: வெள்ள நிவாரணம் வழங்குவதில் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை காங்கிரஸ் கட்சியினர் முடக்கியதாக பாஜக கூறிவருவது வேடிக்கையாக உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பல்வேறு காரணங்களைக் கூறி பாஜக.,வினர் நாடாளுமன்றத்தை முடக்கினர்.

ஆனால் காங்கிரஸ் கட்சி, உண்மையான மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் முன் வைக்கிறது. சகிப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு, டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு உள்ளிட்ட பிரச்சனைகளை விவாததிக்க காங்கிரஸ் அனுமதி கேட்கிறது. ஆனால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. ஊழல் விவகாரத்தில் பாஜக.,வின் நிலைப்பாட்டை தொடர்ந்து கண்டித்து வருகிறோம், நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரசுக்கு இல்லை.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுவைக்கு ரூ.200 கோடி கேட்டு மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினேன். முதல்வர் ரங்கசாமி தாமதமாக கடிதம் எழுதினார். ரூ.50 கோடி நிவாரணத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த தொகையும் இதுவரை வந்து சேரவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையாக குடும்ப அட்டைக்கு தலா ரூ. 4000 அரசு ஊழியர்கள் வைப்பு நிதியிலிருந்து என்.ஆர்.அரசு கொடுத்து வருகிறது. ஆனால் அந்த தொகை பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை முழுமையாக சென்று சேரவில்லை. மத்திய பாஜக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை என்.ஆர் காங்கிரஸ் தந்து வருகிறது. இருப்பினும் புதுவை மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications