சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளில் சாவகாசமாக ஆய்வு செய்யும் மத்திய குழு
சென்னையில் வெள்ளம் பாதிப்பு பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வெள்ளம் வடிந்தவுடன் ஆய்வு செய்ய வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் கடந்த 2015 சென்னை வெள்ளத்தின் போது தத்தளித்ததை போல் இடுப்பளவு நீரில் தாம்பரம் ,முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி என பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் பெரும்பாலான பொருட்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. மின்கம்பங்கள் சாய்ந்தன.
இந்நிலையில் சென்னை, ஓகி புயல் பாதித்த குமரி ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் நேற்று வந்தனர். இதையடுத்து ராயபுரம், மேடவாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது.
மத்திய குழு முறையாக ஆய்வு மெற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வெள்ளமே வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மத்திய குழு ஆய்வு மேற்கொள்ள வந்திருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் இத்தகைய ஆய்வின் மூலம் முறையான தகவல்கள் எதையும் மத்திய குழு திரட்ட முடியாது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆய்வு செய்து விட்டு முதல்வருடன் ஆலோசனை செய்வர். அதன்பின்னர் டெல்லி சென்று தங்களது ஆய்வறிக்கையை தாக்கல் செய்வர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications