காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக முதுகில் குத்திய மத்திய அரசு
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை மத்திய அரசு.
Recommended Video

சென்னை: உச்சநீதிமன்ற விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைச் செயல்படுத்த மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதுவும் 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் கெடு விதித்திருந்தது உச்சநீதிமன்றம். ஆனால் மத்திய அரசோ இதற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.
அழுத்தம் தர வேண்டிய தமிழக அரசோ, 29-ந் தேதி வரை பார்க்கலாம் என இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. மத்திய அரசு தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்துள்ளது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் வஞ்சகத்தால் தமிழக காவிரி டெல்டா பாசனம் கேள்விக்குறியாகிவிட்டது. மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்தின் முதுகில் குத்தி துரோகம் செய்திருக்கிறது மத்திய பாஜக அரசு.
ஒட்டுமொத்த தமிழினத்தையே கொந்தளிக்க வைத்த இத்தகைய பச்சை படுபாதக துரோகத்துக்குப் பின்னராவது தமிழக அரசு விழித்துக் கொண்டு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். இந்த வஞ்சக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனே தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications