சென்னை மெரினாவில் போராட்டத்தை கைவிட போலீஸ் வேண்டுகோள்- மாணவர்கள் மறுப்பு
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை ஏற்க மாணவர்கள் மறுத்து விட்டனர்.
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அவசர சட்டம் இயற்ற உள்ளதாக கூறினர். இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் வாடிவாசல் வழியாக காளைகள் வரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து அவசர சட்டம் அறிவிப்பு தொடர்பான அறிக்கையுடன் மைலாப்பூர் போலீஸ் துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணா மெரினா கடற்கரைக்கு வந்தார். போராட்டக்குழுவினர் மத்தியில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை குறித்து விளக்கினார்.
மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அவசர சட்டம் தொடர்பான அறிக்கையையும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மத்தியில் வாசித்தார். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
அரசின் நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கமிஷ்னர் பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தார். கமிஷ்னர் பேசுவதை அமைதியாக கேட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அவசர சட்டம் பிறப்பித்து வாடிவாசல் வழியாக காளைகள் வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications