வீட்டுக்குள்ளும் வெள்ளம்.. விடிய, விடிய தவித்த மக்கள்.. சிட்லப்பாக்கத்தையும் கவனியுங்கள் அதிகாரிகளே!
சிட்லப்பாக்கம் பகுதியில் வீட்டை சூழ்ந்துள்ள வெள்ள பாதிப்பு குறித்த புகைப்படம், வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் நெட்டிசன்.
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே முதல் வேலையாக மழை சென்னையை புரட்டிப் போட்டுள்ளது.
கொரட்டூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. சிட்லப்பாக்கத்தின் சில ஏரியாக்களில் சமையலறை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் புகுந்துவிட்டது.

வீட்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் தூக்கத்தைத் தொலைத்து நேற்று இரவு முதல் விடிய விடிய மழை நீரை வெளியேற்றினர்.
#ChennaiRains
— Anton Tina (@antontina) October 31, 2017
Chitlapakkam is flooded again, multiple times in the past 3 years, no media covered so far. pic.twitter.com/yfIo34lkxk
அதேநேரம், மீடியா செய்திகளில், சென்னையின் பிற பகுதிகள் பெரும் அளவுக்கான முக்கியத்துவத்தை சிட்லப்பாக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள் பெறுவதில்லை. இதை நெட்டிசன்கள் சிலர் ஆதங்கத்தோடு பகிர்ந்து வருகிறார்கள்.
— Anton Tina (@antontina) October 31, 2017
அப்படித்தான் இந்த நெட்டிசனும் சிட்லப்பாக்கம் பகுதியில் வீட்டை சூழ்ந்துள்ள வெள்ள பாதிப்பு குறித்த புகைப்படம், வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications