ஒருதலைப்பட்சமாக திமுக அறிக்கை வருத்தம் அளிக்கிறது... ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்
போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டுள்ளது வேதனை அளிப்பதாக ஸ்டாலினிடம் முதல்வர் தெரிவித்தார்.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விவகாரத்தில் திமுக ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 4-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் போதிய அளவில் இயக்காததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

தீவிரமடையும்
இதுவரை 23 முறை பேச்சுவார்த்தை நடத்தி விட்ட நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

10 நிமிடம் முதல்வருடன் பேச்சு
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்பாக தொலைபேசியில் நேற்று பேசினார். போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனையில் சமூக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இருவரும் இந்த போராட்டம் தொடர்பாக 10 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது.

வாபஸ் பெற அறிவுறுத்தல்
இந்நிலையில் முதல்வரிடம் பேசியது தொடர்பாகவும், அவர் பதிலளித்தது தொடர்பாகவும் திமுக அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கூறுகையில், திமுக வெளியிட்ட அறிக்கை ஒரு தலைப்பட்சமானது. தொழிற்சங்கங்களிடம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற அறிவுறுத்துங்கள் என்று ஸ்டாலினிடம் கூறினேன்.

பணிக்கு திரும்ப வேண்டும்
மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தேன். ஆனால் திமுகவோ ஒருதலைப்பட்சமாக அறிக்கை வெளியிட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. மக்கள் நலன் கருதி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார் முதல்வர்.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications