எடப்பாடி ஒன்றும் சசிகலா வீட்டு வாட்ச்மேன் அல்ல.... கே.சி. பழனிச்சாமி பொளேர்
எடப்பாடி ஒன்றும் சசிகலா வீட்டு வாட்ச்மேன் அல்ல என்று முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் பதவி என்பது ஒன்றும் சசிகலா வீட்டு வாட்ச்மேன் பதவி அல்ல, அவர் நியமிப்பதற்கு என்று முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் தினகரனுக்கும், எடப்பாடிக்கும் இடையே கடுமையான அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஒருவரை ஒருவர் அன்றாடம் வசை பாடி வருகின்றனர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளதால் தினகரன், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் மீது கடும் விமர்சனங்களை எடுத்து வைக்கிறார். தினகரனோ ஜெயலலிதா இறந்தவுடன் ஓபிஎஸ்ஸையும், சசிகலா சிறை செல்ல நேரிட்டபோது எடப்பாடியையும் சசிகலாதான் முதல்வராக்கினார். ஆனால் அவர் சசிகலாவுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று தினகரன் குற்றம்சாட்டுகிறார்.

கே.சி.பழனிச்சாமி பேட்டி
சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவால் பல அதிமுக பிரமுகர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கடுமையாக உழைத்தவர்களும் சசிகலா குடும்பத்தினரால் அதிமுகவில் இருந்து வெளியேறினர்.

நானும் பாதிக்கப்பட்டேன்
கடந்த 2002-இல் ராஜ்யசபா உறுப்பினர் பதவி எனக்கு வழங்க ஜெயலலிதா உத்தேசித்தபோதும், அதேபோல் 2011-இல் ஈரோட்டில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஜெ.உத்தேசித்தபோதும் அதை கெடுத்தவர்கள் சசிகலா குடும்பத்தினர். 30 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ள நான் சசிகலாவை நேருக்கு நேர் சந்தித்தது கிடையாது.

உதவியாளர்
2011--ஆம் ஆண்டு சசிகலா மன்னிப்பு கடிதம் அளித்து ஜெயலலிதாவின் உதவியாளராக மட்டுமே செயல்பட்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு தன் குடும்பத்தினர் மட்டுமே கட்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சசிகலா நினைத்திருந்தார்.

குடும்ப ஆட்சியை ஒழிக்க...
குடும்ப ஆட்சியை ஒழிக்கவே இன்று சசிகலாவை நாங்கள் எதிர்க்கிறோம். சசிகலா, அவரது குடும்பத்தினர் தவிர்த்து யார் வந்தாலும் தற்போது கட்சியில் சேர்த்து கொள்ள தயாராக உள்ளோம். ஏன் தங்கதமிழ் செல்வன் வந்தாலும் அவரையும் ஏற்போம்.

வாட்ச்மேன்
எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது சசிகலா அல்ல. எம்எல்ஏக்கள்தான். அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்கலாம். ஆனால் முடிவெடுப்பது எம்எல்ஏக்கள்தான். சசிகலா நியமனம் செய்வதற்கு முதல்வர் பதவி ஒன்றும் அவர் வீட்டு வாட்ச்மேன் பணி அல்ல.

கேவலப்படுத்த வேண்டாம்
எடப்பாடியை நியமித்ததே நாங்கள்தான் என்று சசிகலா தரப்பு கூறுவது எம்ஜிஆர், கருணாநிதி , ஜெயலலிதா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் உட்கார்ந்த முதல்வர் நாற்காலியை கேவலப்படுத்தும் செயலாகும். ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் கொன்றுவிட்டனர் என்று ஒவ்வொரு தொண்டனின் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications