Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாய்ந்தது வன்கொடுமை வழக்கு.. பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கணபதி தலைமறைவு

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி தலைமறைவாகிவிட்டார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்ததை அடுத்த அவர் தலைமறைவாகி விட்டார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வுப்படிப்பில் ஈடுபட்டுள்ளார் லட்சுமி பிரபாகரன். இவரை அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள கணபதி சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த பெண் வடவள்ளி போலீஸில் புகார் கூறினார்.

Coimbatore Bharathiyar Univ.VC absconded

புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணையில் துணைவேந்தர் மீதான புகார் உறுதியானது.

இதையடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக கணபதி தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+