புதுச்சேரியில் பெரும் பணக்காரர்களை எதிர்த்து போட்டியிடும் ஏழை மாணவர்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை தொகுதியில் கல்லூரி மாணவரை வேட்பாளராக அறிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஏழை மாணவர் பிற கட்சிகளை சேர்ந்த பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் லாஸ்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்லூரி மாணவர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
ஆனந்த் ஹாயாக பைக்கில் சென்று மக்களோடு மக்களாக ஆகி வாக்கு சேகரித்து வருகிறார். கல்லூரி மாணவர் வேட்பாளராக இருப்பது மக்களுக்கு வியப்பும், மகிழ்ச்சியும் அளித்துள்ளது.
ஆனந்த் வெறும் மாணவர் இல்லை மாணவர்களுக்காக போராடுவதையே வேலையாக கொண்ட எஸ்.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர். பள்ளி காலம் முதலே சக மாணவ, மாணவியரின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். இனியும் போராட துடிப்புடன் உள்ளவர்.
புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் எம்.எல். (சர்வதேச மனித உரிமை சட்டங்கள்) முதலாம் ஆண்டு படித்து வரும் ஆனந்த் 7ம் வகுப்பில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தில் உள்ளார். லாஸ்பேட்டையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான சப்தகிரி சிவக்கொழுந்து, அதிமுக வேட்பாளர் அன்பானந்தம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளரான சிட்டிங் எம்.எல்.ஏ வைத்தியநாதன் என அனைவரும் தொழில் அதிபர்கள், பெரும் பணக்காரர்கள்.
ஆனந்த் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் அவரது தந்தை பெட்டிக்கடை வைத்துள்ளார். ஆனந்தின் 2 தங்கைகளும் பி.இ. படித்துள்ளனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications