மகாபாரதம் குறித்து அவதூறு பேச்சு… மே 5ல் கோர்ட்டில் ஆஜராக நடிகர் கமலுக்கு உத்தரவு
மகாபாரதம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் மே 5ம் தேதி நடிகர் கமலஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்ற வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
வள்ளியூர்: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மகாபாரதம் குறித்து நடிகர் கமலஹாசன் பேசினார். அப்போது மகாபாரத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பது பற்றி பேசினார்.
இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.
கமல் மகாபாரதத்தை அவமானப்படுத்திவிட்டார் என்று இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. அவருக்கு எதிரான போராட்டங்களை நடத்தின.

வழக்கு
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரைச் சேர்ந்தவர் ஆதிநாத சுந்தரம். பக்கத்து ஊரான அஞ்சுகிராமத்தில் வியாபாரம் செய்து வரும் இவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

நடவடிக்கை
அந்த மனுவில், "கடந்த மாதம் 12-ந்தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். எனவே நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அறிக்கை தாக்கல்
மனுவை ஏற்றுக்கொண்ட வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலஹாசனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன் மீதான புகாரை விசாரித்து இது தொடர்பாக பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கமல் ஆஜர்
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாத பாவூர் காவல்நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வரும் மே மாதம் 5ம் தேதி நடிகர் கமலஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications