நாசக்காடாக்கிய வர்தா புயல்... இருளில் முடங்கியது இயல்பு வாழ்க்கை- தனித் தீவானது சென்னை!
சென்னையை 7 மணி நேரம் தாக்கிய வர்தா புயல் ஒட்டுமொத்த மாநகரை நாசக்காடாக்கிவிட்டது. சென்னை நகரில் 3-வது நாளாக இன்றும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால் இருளில் முடங்கிக் கிடக்கிறது இயல்பு வாழ்க்கை.
சென்னை: சென்னையில் இடைவிடாமல் 7 மணிநேரம் தொடர்ந்து தாக்கி கோரத்தாண்டவமாடிய வர்தா புயலால் ஒட்டுமொத்த நகரமே நாசக்காடாகிப் போனது. மின்சாரம் 3வது நாளாக விநியோகிக்கப்படாததால் சென்னை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை இருளில் முடங்கிக் கிடக்கிறது.
பேய்க்காற்று... பேரிரைச்சலுடனான பெருமழை... சென்னை மாநகரவாசிகள் வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு அச்சுறுத்தலை பார்த்தது இல்லை... சென்னையை சூறையாடிய வர்தா புயல் வரலாறு காணாத பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டுப் போயுள்ளது.
வர்தா புயல் நேற்று முன்தினம் காலை தீவிரமடைந்து சென்னை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

விடுமுறை
வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கும் விடுமுறை அளிக்கும்படி தமிழக அரசு சுற்றிக்கை அனுப்பியது.

3 கட்டங்களாக...
வர்தா புயலானது நேற்று பிற்பகல் முதல் சென்னையில் 3 கட்டங்களாக கரையைக் கடந்தது. மொத்தம் 7 மணிநேரம் சென்னையை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றது வர்தா புயல்.

ருத்ரதாண்டவம்...
இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் பேய்க்காற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். சாலைகளில் திடீர் திடீரென மரங்கள், ராட்சத பேனர்கள், கடைகளின் முகப்பு போர்டுகள் சரிந்து விழுந்தன. கார்கள், பேருந்துகளை புரட்டிப் போட்டு ருத்ரதாண்டவமாடியது வர்தா.

போக்குவரத்து இல்லை
இதனால் உயிருக்கு அச்சப்பட்டு மக்கள் வெளியே வராமல் வீட்டில் முடங்கினர். ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் பறந்தன. ஒட்டுமொத்த ரயில் சேவையுமே முடக்கப்பட்டது. சென்னையில் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் இரவு முழுவதும் மூடப்பட்டது.

தனித்தீவானது
சென்னை நகரத்தில் நேற்று மட்டும் 3,000 மின்கம்பங்கள் கீழே விழுந்தன. தொலைத் தொடர்பு சேவையும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சென்னை பெருநகரம் ஒரு தனித்தீவாகிப் போய்விட்டதுதான் சோகம்.

தொடரும் மீட்பு பணிகள்
சென்னை நகரில் நேற்று புயல் கரையை கடந்த நிலையில் தொடர்ந்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்தன. இருப்பினும் சென்னை மாநகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில நாட்களாகும் என்றே தெரிகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications