சசி கும்பலோடு தீபக் சதி - திட்டமிட்டு வரவழைத்து அடித்து விரட்டினார்கள்- தீபா குற்றச்சாட்டு
சசிகலா கும்பலோடு சேர்ந்து தீபக் சதி செய்வதாக தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: சசிகலா கும்பலோடு சேர்ந்து கொண்டு தீபக் தன்னை திட்டமிட்டு வரவழைத்து குண்டர்களை வைத்து அடித்து விரட்டினான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர், போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை திடீரென தீபா தனது ஆதரவாளர்களுடன் போயஸ் தோட்டத்திற்கு வந்தார். அங்குள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அவர் நுழைய முயற்சிக்கவே, சசிகலாவின் ஆதரவாளர்கள் திரண்டுவந்து, வழி மறித்தனர். இதனால், பெரும் தள்ளுமுள்ளு அங்கே ஏற்பட்டது.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அழுதுகொண்டே கணவர் மாதவனுடன் வெளியே வந்த தீபா, பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு பூஜை
அத்தை ஜெயலலிதாவுக்காகச் சில சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என தீபா சொன்னார். அதில் கலந்துகொள்ள போயஸ் தோட்டம் வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதற்காகவே, நான் இங்கே வந்தேன்.

தீபக் சதி
போயஸ்கார்டன் வீட்டில் குண்டர்கள் இருக்கின்றனர். என்னையும் செய்தியாளர்களைம் உள்ளே விடாமல், சிலர் தடுத்தனர். செய்தியாளர்களை அடித்தனர். நான்பாட்டுக்கு என் வேலையை செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் சசிகலா கும்பலுடன் சேர்ந்து தீபக் சதி செய்கிறான்.

தப்பித்து வெளியேறினோம்
சிவனே என்று இருந்த என்னை வரவழைத்து குண்டர்களை வைத்து அடித்து கொல்லப்பார்க்கிறான். செய்தியாளர்கள் வந்ததால் நாங்கள் தப்பித்து வெளியே வந்தோம். இல்லை என்றால் எங்களை கொலை செய்திருப்பார்கள்.

மாதவனை அழைத்தேன்
உயிர்பயத்தில் நான் மாதவனை அழைத்தேன். என்னை காப்பாற்றுவதற்காக அவர் வந்தார். செய்தியாளர்களையும் குண்டர்கள் அடித்து தாக்கினார்கள். போயஸ்கார்டன் குண்டர்களால் சூழப்பட்டுள்ளது. என்னை தடுக்க இவர்கள் யார்?

தீபா ஆவேசம்
எந்த சூழ்நிலையிலும் நிதானமாக பேசும் தீபா, யோசித்து யோசித்து கேள்விகளுக்கு பதில் சொல்லும் தீபா இன்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கொந்தளிப்புடன் கண்ணீருடன் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications