எள்ளுன்னா எண்ணெய்யா இருக்குறாங்களே தீபா தொண்டர்கள்... ஆர்.கே நகரில் தீவிர பிரசாரம்!
தேர்தல் ஆணையம், ஆர்கே நகரில் இடைதேர்தல் தேதியை நேற்று அறிவித்தது. அடுத்த நாளே தீபாவின் ஆதரவாளர்கள் ஆர்கே நகரில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: ஜெ.தீபா ஆதரவாளர்கள், ஆர்.கே நகர் தொகுதியில் இன்றே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். தேர்தல் ஆணையம் நேற்று ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கும் என அறிவித்தது
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இறந்துவிட்டார். அதனையடுத்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12ஆம் தேதி, இடைத்தேர்தல் எனவும், எப்ரல் 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் அதிமுக சசி அணி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் நேர்முகத் தேர்வுக்குத் தயாராகி வருகிறது. ஆனால், ஜெ.யின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என நேற்றே அறிவித்துவிட்டார்.
அவர் அறிவித்த அடுத்த நாளே அவரது தொண்டர்கள் ஆர்கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்கே நகர் தொகுதியிலுள்ள திலகர் நகர், சிவகாமி நகர், சுனாமி குடியிருப்பு உள்பட பல இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் பணி அலுவலகம் தொடங்கும் வேலையையும் ஆரம்பித்துவிட்டனராம் 'ஸ்பீடு' தொண்டர்கள்.
தீபா புதிதாகத் தொடங்கியுள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு, தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கவில்லை. ஆனால், அதற்குள் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் இப்பொழுதே ஆர்கே நகர் தொகுதி களை கட்ட ஆரம்பித்துவிட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications